This Article is From Jul 30, 2019

இலக்கை நோக்கிச் செல்லும் சந்திரயான் - 2; அடுத்த சுற்று நிலைக்கு உயர்த்தப்பட்டது!

இரண்டாவது ஆர்பிட்டில் இருந்து சந்திரயான் தற்போது 3-ம் ஆர்பிட்டிற்கு உயர்ந்துள்ளது. அடுத்ததாக ஆகஸ்ட் 2-ம்தேதி அடுத்த இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலக்கை நோக்கிச் செல்லும் சந்திரயான் - 2; அடுத்த சுற்று நிலைக்கு உயர்த்தப்பட்டது!

எதிர்வரும் செப்டம்பர் 7-ம்தேதி சந்திரயான் நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மைல் கல்லாக கருதப்படும் சந்திரயான் 2 செயற்கைகோள் இலக்கை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரையில் 2-வது ஆர்பிட்டில் சசென்று கொண்டிருந்த சந்திரயான் 2- இன்று மதியம் 3:12-க்கு 3-ம் நிலை ஆர்பிட்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

எதிர்பார்த்தபடியே சந்திரயான் வெற்றிகரமாக செயல்படுகிறது என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலாவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 செயற்கைகோள் கடந்த 22-ம்தேதி அனுப்பி வைக்கப்பட்டது. 

புறப்பட்ட 16-வது நிமிடத்தில் ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்து புவியை குறைந்த பட்சம் 170 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சம் 45, 475 கிலோ மீட்டர் தொலைவிலும் நீள் வட்டப் பாதையில் சுற்றியது. 

இதன்பின்னர் அடுத்தடுத்து 2 முறை சந்திரயானின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது 3-வது முறையாக சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து 71, 792 கிலோ மீட்டர் நீள் வட்டப்பாதையில் சந்திரயான் செயற்கைகோள் புவியை சுற்றும். 

எதிர்வரும் செப்டம்பர் 7-ம்தேதி சந்திரயான் நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.