Read in English
This Article is From Jul 15, 2019

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே போலீஸ் அதிகாரி!

இந்த சம்பவம் இன்று காலை நிகழ்ந்துள்ளது. லோயர் பெர்த்தில் தூங்கி கொண்டு வந்த பெண்ணிடம் அந்த அதிகாரி தவறாக நடக்க முயன்றுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

அதிவிரைவு ரயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Bhopal:


ஓடும் ரயிலில் ரயிலில் பெண் ஒருவருக்கு மூத்த ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நரசிங்பூரில் இருந்து ஜாபல்பூர் சென்ற அதிவிரைவு ரயிலில், ரயில்வே அதிகாரி ஒருவரின் மனைவி பயணம் செய்துள்ளார். லோயர் பெர்த்தில் தூங்கி கொண்டு வந்த அவரிடம் இன்று அதிகாலை, ரயிலில் வந்த மூத்த ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். 

இதையடுத்து, அந்த பெண் கூச்சலிடவே, அருகில் இருந்த சக பயணிகள் மற்றும் டிக்கெட் பரிசோதகர் விரைந்துள்ளனர். தொடர்ந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த நபர், ஜாபல்பூரை தலைமையிடமாகக் கொண்ட மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமை பாதுகாப்பு ஆணையர் விஜய் காத்தார்கர் என்பது தெரியவந்தது. 

ஆர்.பி.எஃப் துணை ஆய்வாளராக இருந்த அவர் அண்மையிலே பதவி உயர்வு பெற்றுள்ளார். தொடர்ந்து, அந்த பெண் அளித்த புகாரின் பெயரில், மூத்த ரயில்வே பாதுகாப்பு அதிகாரி விஜய் மீது ஐபிசியின் 354 (a) பிரிவின் கீழ் பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

Advertisement

with inputs from PTI

Advertisement