This Article is From Feb 26, 2019

யார் அந்த யூசுப் அசார்? பாலகோட் பயிற்சி மையத்தின் பின்னணி!

கடந்த 1999-ம் ஆண்டு ஏர்பஸ் IC 814 விமானத்தை கடத்தியதில் முக்கியமானவர்களில் ஒருவன் இந்த யூசுப் அசார். மசூர் அசாத் உள்ளிட்ட 2 தீவிரவாதிகளை விடுவிக்க கோரி 7 நாட்களாக விமானத்தை கடத்தி வைத்திருந்தான்

யார் அந்த யூசுப் அசார்? பாலகோட் பயிற்சி மையத்தின் பின்னணி!

கராச்சியில் பிறந்த மசூர் அசாத் உருது மற்றும் இந்தி பேச தெரியும்.

New Delhi:

பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய முகாம் மீது இன்று அதிகாலை இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 200 தீவிரவாதிகள் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 14-ஆம் தேதி ஜம்மூ- காஷ்மீரின், ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 78 வாகனங்களில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது 22 வயது நிரம்பிய தீவிரவாதி ஒருவன், 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கொண்ட கார் மூலம் வந்து, பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தில் மோதினான். இதனால், 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய முகாம் பாலகோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முகாமில் இருந்து கொண்டுதான் இந்தியாவுக்கு எதிரான சதித் திட்டங்களை தீவிரவாதிகள் தீட்டியும், செயல்படுத்தியும் வந்தனர்.
பயிற்சி முகாமில் 600 பேர் தங்கும் அளவுக்கு வசதிகள் உள்ளன. ஜெய்ஷ் இ முகமதுவின் கமாண்டர் மசூத் அசாரின் சகோதர்ர் முப்தி அப்துல் அமீர்தான் ஜெய்ஷ் இ முகமதுவுக்கு பொறுப்பாளராக இருக்கிறார்.

அவர் ஆண்டுதோறும் நடைபெறும் அணிவகுப்பில் மட்டும் கலந்து கொள்கிறார். முகாமில் காணப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் நாட்டு கொடிகள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் தீவிரவாதிகள் சித்தரிப்பு செய்துள்ளனர். பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.-ன் தூண்டுதலின்பேரில் பாலகோட் தீவிரவாத முகாமில் 250-க்கும் அதிகமான தீவிரவாதிகள் பயிற்சி பெற்று சென்றுள்ளனர்.

i19n879o

 

வெடி மருந்து கிடங்கும், சுமார் 200-க்கும் அதிகமான ஏ.கே. 47 துப்பாக்கிகளும் டெட்டனேட்ரடர் உள்ளிட்ட பயங்கர வெடி மருந்துகளும் ஒரு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.பாலகோட் பயிற்சி முகாமுக்கு ஜெய்ஷ் இ முகமதுவின் மைத்துனர் மவுலானா யூசுப் அசார் இதற்கு பொறுப்பாளராக இருந்துள்ளான்.

இந்திய விமானப்படையைச் சேர்ந்த 12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள், நாட்டின் எல்லையைத் தாண்டி லேசர் வசதி கொண்ட 1,000 கிலோ வெடிகுண்டுகளை இலக்குகள் மீது போட்டுள்ளன. முதல் வெடிகுண்டு இன்று அதிகாலை 3:45 மணிக்கும், அடுத்த தாக்குதல் 3:48 மணிக்கும் அதற்கடுத்த தாக்குதல் 3:58 மணிக்கும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த தாக்குதல் ஆபரேஷனும் 19 நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் யூசுப் அசாரும் கொல்லப்பட்டான். யூசுப் அசார் 1999-ம் ஆண்டு ஏர்பஸ் IC 814 விமானத்தை கடத்தியவன் ஆவான். புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 12 நாட்களில் இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க : பாகிஸ்தான் தீவிரவாத பயிற்சி முகாமின் புகைப்படங்கள் வெளியானது!

.