Read in English
This Article is From Mar 12, 2019

''மோடியின் தலைமையின் கீழ்தான் நாடு பாதுகாப்பாக உள்ளது'': அருண் ஜெட்லி

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் தாக்குதல் வலிமையற்றுப் போனதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

நாட்டின் பாதுகாப்புக்கு பாஜகவே காரணம் என்கிறார் அருண் ஜெட்லி.

New Delhi:

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா பாதுகாப்புடன் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது-

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் தாக்குதல் வலிமையற்றுப் போனதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். வரவிருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை நம்பி மக்கள் வாக்களித்தால் அதனை அதிசயமாகத்தான் பார்க்க வேண்டும். 

தீவிரவாதிகளை பாலகோட்டில் வேட்டையாடியதற்கு காங்கிரஸ் கட்சி ஆதாரங்களை கேட்கிறது. பாகிஸ்தானை கையாளுவதில் பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார். அந்நாட்டுடன் அமைதியான முறையில் உறவு வைத்துக் கொள்ள பிரதமர் மோடி விரும்பினார். 

ஆனால் பதான்கோட், உரி, புல்வாமா என பல்வேறு களங்களில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டது. இதற்கு தக்க பதிலடி கொடுத்தோம். பாகிஸ்தானின் கைக்குள் இந்தியாவை கொண்டு சென்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். 

Advertisement

இந்த நாடு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ்தான் பாதுகாப்பாக இருக்கிறது. இவ்வாறு நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். 

Advertisement