This Article is From Feb 20, 2020

கார் விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!

அதிவேகமாக சென்ற கார் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியுள்ளது. 

கார் விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Jammu:

ஜம்மு - பதான்கோட் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, அதிகாலை 5.30 மணி அளவில், ஸ்வாந்தா மோர் பகுதி அருகே அதிவேகமாக சென்ற கார் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியுள்ளது. 

இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயமடைந்தனர், உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், 5 பேரும் வரும் வழியிலே உயிரிழந்தவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர்கள் தர்ஷன் சிங் (70), அவரது மனைவி தர்ஷன் கவுர் (65), அர்ஜூன் சிங் (75), உறவினர் மன்ஜித் சிங் (56) அவரது மகன் சாஹிப் சிங் (20) உள்ளிட்ட 5 பேர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

பஞ்சாபில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு திரும்பி வரும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

.