বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 18, 2019

காவல் நிலையம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்! பொதுமக்கள் 10 பேர் படுகாயம்!!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. கடந்த சில நாட்களாக தீவிரவாத தாக்குதல் காஷ்மீரில் அதிகரித்திருக்கிறது.

Advertisement
இந்தியா Edited by
Pulwama:

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். கையெறி குண்டுகளை தீவிரவாதிகள் வீசியதில், பொதுமக்கள் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. 

நேற்று ராணுவ வாகனம் ஒன்று தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. இந்த சம்பவமும் புல்வாமா மாவட்டத்தில்தான் நடந்தது. இதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். 16 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கடந்த வாரம் இந்திய தூதரகத்திடம் பாகிஸ்தான் தெரிவிதிருந்தது. கடந்த பிப்ரவரியில் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தனர். 

Advertisement
Advertisement