சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சோபியான் மாவட்டத்தில் இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்டவர் எந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்படவில்லை. என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் வெடி பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த தகவலை ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.