বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 01, 2019

ஜாம்ஷெட்பூரில் 3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை : உடலை பிளாஸ்டிக் பையில் கண்டுபிடித்தனர்

Jharkhand rape: காவல்துறையினர் கொடுத்த அறிக்கையின் படி, 30 வயதை ஒட்டிய குற்றவாளிகள் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து பின் துண்டித்ததாக ஒப்புக் கொண்டதாக கூறியுள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by (with inputs from PTI)

குழந்தையின் உடலில் இருந்த காயங்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Jamshedpur:

ஜார்காண்ட் ஜாம்ஷெட்பூரில் ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்து கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தையை கடத்தி இரண்டு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளிகளில் ஒருவர், 2015இல் ஜெயிலிருந்து வெளிவந்த பின் குழந்தையைக் கடத்தி கொலை செய்ய முயன்றதும் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவத்தில் சிறுமி கடந்தவாரம் தன் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார். சிசிடிவி காட்சிகள் ஒரு நபர் தனது கைகளில் தூங்கும் குழந்தையுடன் நடந்து செல்வதைக் காட்டியது. மறுநாள் காலை காணாமல் போனதாக அவரது தாயார் தெரிவித்தார். அந்த பெண் தனது கூட்டாளி ஒருவரை சந்தேகிப்பதாக காவல் நிலையத்தில் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மூவரில் அந்த நபரும் அடங்குவர். 

சிசிடிவி காட்சிகள் காட்சிகள் சந்தேகத்துக்குரிய நபர்களை குற்றவாளியாக்க உதவியது.

Advertisement

செவ்வாய்கிழமை இரவு ரயில் நிலையத்திலிருத்ந்து நான்கு கி.மீ தூரத்தில் சேரிகளுக்கு  அருகே புதருக்கு பின்னால் இருந்த பிளாஸ்டிக் பையில் குழந்தையின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

காவல்துறையினர் கொடுத்த அறிக்கையின் படி, 30 வயதை ஒட்டிய குற்றவாளிகள் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து பின் துண்டித்ததாக ஒப்புக் கொண்டனர்.

Advertisement

குழந்தையின் தலையை கண்டுபிடிக்கும் பணி மோப்ப நாய்கள் பயன் படுத்தப்பட்டன. அது இன்னும் காணவில்லை என்று  மூத்த ரயில்வே காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

குழந்தையின் காயங்கள் சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement