Jaunpur, Uttar Pradesh:
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
உத்தர பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு வினோதமான சம்பவத்தில் ஒரு நபர் உயிரிழுந்துள்ளார். 50 முட்டை சாப்பிடுவதாக கூறி சவாலில் பங்கேற்ற 42 வயதான சுபாஷ் யாதவ் என்ற நபர் உயிரிழந்துள்ளார்.
சுபாஷ் தன் நண்பரை ஜான்பூர் மார்க்கெட்டில் சந்திக்கச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது 50 முட்டைகளை சாப்பிடுபவருக்கு 2,000 செலுத்த வேண்டும் என சவால் ஏற்பட்டது
இந்த சவாலில் கலந்து கொண்ட சுபாஷ் 41 முட்டைகளை சாப்பிட்டார். 42 வது முட்டையை சாப்பிடும்போது நிலைகுழைந்து மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். அதிகமாக சாப்பிட்டதால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
COMMENTS
Advertisement