This Article is From Dec 21, 2018

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் வைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க ஓப்புதல் அளித்த மத்திய அரசுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் வைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

அதிமுக அம்மா பேரவை சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமை வகித்தார். இதில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் வைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க இந்த கூட்டம் நடத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நன்றி தெரிவிப்பு கூட்டத்தை பாஜக ஆதரவு கூட்டம் என்று ஒப்பிட வேண்டாம் என்று விளக்கமளித்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கக்கூடிய, பல கோடி உயிர்களை காக்கும் புனித திட்டமான இந்த எய்ம்ஸ் மருத்துவமனையை, தந்துள்ள பிரதமருக்கும் அவரது தலைமையிலான அமைச்சரவைக்கும் தமிழின் அடையாளமாக, தமிழர் என்ற அடையாளமாக, நாம் இன்று நன்றி தெரிவித்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
 

.