Kolkata:
விமானத்தைத் தகர்க்கப் போவதாக கைப்பேசியில் பேசியதால் வாலிபர் ஒருவர் கொல்கத்தா விமான நிலையத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் இருந்து மும்பை செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.பொடார் என்னும் பயணி தன் கைப்பேசியில், விமானத்தை தகர்க்கப் போவதாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர்
காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மேல் விசாரணைக்காக அவரை போலீஸிடம் ஒப்படைப்பதாகவும் கூறினர். இதனால் கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
COMMENTS
Advertisement