This Article is From Dec 04, 2018

மனநலம் பாதிக்கப்பட்டவரை அடித்துக் கொன்ற கிராமத்தினர்!

ஜார்கண்டில் உள்ள ஒரு கிராமத்தில் மனநலம் பாதித்த ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்து கொன்றுள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவரை அடித்துக் கொன்ற கிராமத்தினர்!

இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Ranchi:

ஜார்கண்டில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு பேரை கொன்றதாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஞ்சியில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள நாக்ரா கிராமத்தை சேர்ந்தவர்கள் ரோஷன் (23), சிவா (50). இவர்கள் இருவரும் தங்களது நிலத்தில் பிர்சா என்பவரின் கால்நடைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது குறித்து பிர்சாவிடம் முறையிட சென்றுள்ளனர்.

பிர்சா, ஏற்கனவே மனநல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருபவர். இந்நிலையில், பிர்ஷா தன்னிடம் முறையிட வந்த, ரோஷனையும், சிவாவையும் தனது கையில் இருந்த கோடாரியால் சரமாரியாக வெட்டி கொன்றுள்ளார்.

இந்த செய்தி கிராமம் முழுவதும் பரவவே, கிராமத்தினர் ஆவேசமாக பிர்சாவை பிடித்து தாக்க ஆரம்பித்தனர். கிராமத்தினரின் கடுமையான தாக்குதலில் பிர்சாவும் பின்னர் உயிரிழந்ததாக மான்டார் காவல் நிலைய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

.