Read in English
This Article is From Aug 03, 2018

உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.எம்.ஜோசப்பை நியமிக்க மத்திய அரசு அனுமதி!

உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திர அரசு அனுமதி அளித்துள்ளது

Advertisement
இந்தியா
New Delhi:

உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திர அரசு அனுமதி அளித்துள்ளது. கே.எம். ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கோரி மத்திய அரசுக்கு, கொலிஜியம் முன்னர் பரிந்துரை செய்தது. ஆனால், அதை மத்திய அரசு நிராகரித்தது. தற்போது மீண்டும அவரது பெயரை கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இந்த முறை அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு.

‘உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப், ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினீர் சரன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படு வருகிறது’ என்று சட்டத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செலமேஷ்வர், பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து, கே.எம். ஜோசப்பின் பெயரை உச்ச நீதிமன்ற கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது. 

 

கொலிஜியம், ஒரு நீதிபதியின் பெயரை இரண்டு முறை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தால், மத்திய அரசு, அதனை ஏற்றாக வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாக தகுதியடைவர்களை கொலிஜியம் பரிந்துரைத்தால் அதை மத்திய அரசு மறுக்கும் சம்பவம் எப்போதாவது தான் நடக்கும். 

இந்நிலையில் நீதிபதி ஜோசப்பின் பெயரை மத்திய அரசு திரும்ப அனுப்பியதற்கு வேறு காரணம் இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அதாவது, கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தரகாண்டில் அமலாகியிருந்த ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக ஜோசப் தீர்ப்பளித்தார். இது காங்கிரஸ், அரசு அமைக்க ஏதுவாக ஆனது. அதனால்தான் நீதிபதி ஜோசப்பின் பெயரை மத்திய அரசு திரும்ப அனுப்பியது என்று குற்றம் சாட்டின எதிர்கட்சிகள். இதை சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மறுத்துள்ளார். 

Advertisement
Advertisement