Read in English
This Article is From Jan 30, 2019

புதுவையில் கட்சியை தொடங்குகிறார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின்போது மக்கள் நீதி மய்ய கட்சியை ராமேஸ்வரத்தில் கமல்ஹாசன் தொடங்கினார்.

Advertisement
தமிழ்நாடு

புதுவையில் கட்சி தொடங்கப்பட்ட பின்னர் சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கிறார்

Chennai:

நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்ய கட்சியை புதுவையில் இன்று தொடங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், '' மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு மக்களுடன் ஓராண்டு பயணத்தை கட்சி நிறைவு செய்திருக்கிறது. புதுச்சேரியிலும் மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட உள்ளது. இதன்பின்னர் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கிறார்'' என்று கூறப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ம்தேதி கமல்ஹாசனின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டது. இதன்பின்னர் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து கமல்ஹாசன் பேசி வருகிறார்.

Advertisement

வரவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் கமல் அறிவித்துள்ளார். கொள்கைகளுடன் ஒத்துப் போக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

Advertisement