This Article is From Oct 30, 2019

Heavy Rain Alert for TN- காஞ்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

Heavy Rain Alert for TN- அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

Heavy Rain Alert for TN- காஞ்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

Heavy Rain Alert for TN- அடுத்த 24 மணி நேரத்தில் மாலத்தீவு, லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

Heavy Rain Alert for TN- வடகிழக்கு பருவமழை (NEM) காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் (Tamilnadu) எந்தெந்த மாவட்டங்களில் கனமழை (Heavy Rain) பெய்யும் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் வெளியிட்ட அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு இலங்கைக்கு அப்பால் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலைக் கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மாலத்தீவு, லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

.