This Article is From Aug 08, 2018

கருணாநிதி மறைவுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் இரங்கல்

இரங்கல் செய்தியை பா.ஜ.கவின் மூத்த தலைவர் இல.கணேசன் மூலம் தெரிவித்தார் விஜேயிந்திர சரஸ்வதி

Advertisement
இந்தியா Posted by

கலைஞர் கருணாநிதி மறைவுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியை பா.ஜ.கவின் மூத்த தலைவர் இல.கணேசன் மூலம் தெரிவித்தார் விஜேயிந்திர சரஸ்வதி. கருணாநிதி பல முறை காஞ்சி சங்கர மடத்துக்கு ஆதரவாக இருந்துள்ளார் என்று அந்த இரங்கல் செய்தியில் கூறியிருக்கிறார் “ மடத்தின் இரங்கலை, அனுதாபங்களை, கலைஞரின் குடும்பத்துக்கு தெரிவிக்குமாறு என்னிடம் கூறப்பட்டது” என்றார் இல கணேசன்.

ஏற்கெனவே ஒரு முறை கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய இல. கணேசன், மடத்தின் இரங்கலை தெரிவிக்க மீண்டும், சென்று ஸ்டாலினிடம் தகவலை பதிவு செய்தார்.

இன்று மாலை 7 மணிக்கு கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில், ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement