This Article is From Nov 23, 2018

கஜா புயலில் சேதமடைந்த கலைஞரின் பூர்வீக இல்லம்!

கலைஞரின் திருக்குவளை இல்லமானது, முறையாக பராமரிக்கப்பட்டு கலைஞரின் நினைவு இல்லமாகவும், நூலகமாகவும் செயல்பட்டு வந்தது.

கஜா புயலில் சேதமடைந்த கலைஞரின் பூர்வீக இல்லம்!

திருவாரூர்: திருக்குவளையில் இருக்கும் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் பிறந்து வளர்ந்த வீடு, கஜா புயலால் கடுமையாக சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கஜா புயல் கடந்த 15ஆம் தேதி நாகை, வேதாரண்யம் இடையே கரையை கடந்த நிலையில் நாகப்பட்டினம், வேதாரண்யம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் காரணமாக 63 பேர் உயிரிழந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கஜா புயலால் திருக்குவளையில் உள்ள மறைந்த திமுக தலைவர் கலைஞரின் வீட்டின் முன்னாள் இருந்த மரம் வேருடன் சரிந்து விழுந்தது. இதில் வீட்டின் மேற்கூறையில் பலத்த சேதம் ஏற்பட்டது. மேலும் வீட்டின் முன் இருந்த பெயர் பலகையும் சரிந்து விழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருக்குவளை இல்லமானது, முறையாக பராமரிக்கப்பட்டு கலைஞரின் நினைவு இல்லமாகவும், நூலகமாகவும் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் கஜா புயலால் அந்த இல்லம் சேதமடைந்ததால், திமுகவினரும், அப்பகுதி மக்களும் சோகமடைந்துள்ளனர்.
 

.