This Article is From Aug 08, 2018

“ஓய்வெடுக்காமல் உழைத்தவன்…”சந்தனப் பேழையில் கருணாநிதி விரும்பிய வாசகம்

5 முறை முதல்வர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுகளாக தி.மு.க தலைவர் என ஓய்வெடுக்க நேரமின்றி உழைத்தவர் கலைஞர்

Advertisement
இந்தியா Posted by

தமிழக மக்களுக்காக 60 ஆண்டுகளாக உழைத்து ஓய்ந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. 5 முறை முதல்வர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுகளாக தி.மு.க தலைவர் என ஓய்வெடுக்க நேரமின்றி உழைத்தவர் கலைஞர்.

இறுதி மூச்சு உள்ளவரையில் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று திடமாக இருந்தவர். தனக்கு ஓய்வு என்பது மரணத்தில் மட்டும் தான் என்பதில் உறுதியாக இருந்தவர்.

அதனால் தான் தனது கல்லறையில் இவ்வாறு எழுதுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். “ ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்”. இந்த வாக்கியம் தான் கலைஞர் கருணாநிதி அடக்கம் செய்யப்பட இருக்கும் சந்தனப் பேழையில் பொறிக்கப்பட்டு தயாராக இருக்கிறது.

அண்ணா கொடுத்துச் சென்ற வேலைகளை முடித்துவிட்டு, அவருக்கு அருகிலேயே ஓய்வெடுக்கச் செல்கிறார் அந்த தம்பி.

Advertisement
Advertisement