சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மீது பாஜக, “இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக” சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலைச் சேர்ந்த சுரேந்திரன் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
முன்னதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்தி வந்த விசாரணையில் நேற்று இரவு கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் சரணடைந்துள்ள சுரேந்திரனை தமிழகம் கொண்டுவர தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.