This Article is From Aug 06, 2019

சட்டப்பிரிவு 370 ரத்து: காஷ்மீரின் தற்போதைய நிலவரம் என்ன?

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரில் கலவரம் ஏற்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் நீண்ட நாட்களுக்கு தொடரலாம் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சேமிக்கப்பட்டு காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரி கூறினார்.

Srinagar:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறந்த அந்தஸ்தான சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தும், காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். 

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரில் கலவரம் ஏற்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நீண்ட நாட்களுக்கு தொடரலாம் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

மேலும், காஷ்மீர் பள்ளாத்தாக்கில் 3 மாதங்களுக்கு தேவையான அரசி, முட்டை, எரிபொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது, இதனால் எந்த உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுபாடு எற்படாது என திட்ட ஆணைய முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு கொண்டுவரப்பட்ட மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் நிறைவேறியது. முன்னதாக சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் போராட்டம் வெடிக்கும் என்று காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

இதனால், முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனால் காஷ்மீரில் நிலைமை மேலும் பாதிப்பு அடைந்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீர் முழுவதும் கூடுதலாக 8,000 சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

சி-17 போக்குவரத்து விமானம் மூலம் துணை ராணுவப்படையினர் ஸ்ரீநகர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறன்றன. ஏற்கனவே கடந்த வாரத்தில் மட்டும், 35,000க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் ஜம்மு-காஷ்மீரில் குவிக்கப்பட்டு வந்தனர். 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய முடிவு செய்த மத்திய அரசு இதனை ரகசியமாக வைத்து வந்தது. இதற்காக கடந்த ஒரு வாரமாக பல அதிரடி நடவடிக்கைகளை காஷ்மீரில் மத்திய அரசு செய்து வந்தது.  

அமர்நாத் யாத்திரை சீர்குலைப்பதற்காக பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது என்று பொதுவெளியில் தெரிவித்துவிட்டு, அமர்நாத் யாத்திரைக்க வந்த பக்தர்கள் உடனடியாக தங்கள் செந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல உத்தரவிட்டது. 

தொடர்ந்து, வெளிமாநில மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட வெளிமாநிலங்களை சேர்ந்த அனைவரும் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்தச் சூழலில் நேற்று முன்தினம் இரவு முதல் கேபிள் சேவைகள், தொலைபேசி, இணையதள சேவைகள் முடக்கி வைக்கப்பட்டது, இந்த முடக்கம் இன்னும் தொடர்ந்து வருகிறது. 
 

.