This Article is From Aug 28, 2018

கேரள வெள்ளம்: கொச்சி விமான நிலையம் ஆகஸ்ட் 29 முதல் மீண்டும் செயல்படும்

விமான நிறுவனங்களின் இணையதளங்களில் இப்போதே ஆகஸ்ட் 29 முதலான விமான சேவைகளைப் பதிவுசெய்வது தொடங்கியுள்ளது.

கேரள வெள்ளம்: கொச்சி விமான நிலையம் ஆகஸ்ட் 29 முதல் மீண்டும் செயல்படும்

வெள்ளம் காரணமாக கொச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுவது முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது.

Kochi:

வெள்ளம் காரணமாக கடந்த பல நாட்களாக மூடப்பட்டிருந்த கொச்சி விமான நிலையம் ஆகஸ்ட் 29 முதல் வழக்கம்போல முழுவீச்சில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஆகஸ்ட் 29 பிற்பகல் இரண்டு மணி முதல் முழுவீச்சில் (பன்னாட்டு, உள்நாட்டு) இயங்கத் தொடங்கும்” என்று கொச்சி பன்னாட்டு விமான நிலைய லிமிட்டட் (CIAL) சார்பில் அதிகார்வபூர்வமாக இதுபற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விமான நிறுவனங்களுக்கும் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் இணையதளங்களில் இப்போதே ஆகஸ்ட் 29 முதலான விமான சேவைகளைப் பதிவுசெய்வது தொடங்கியுள்ளது.

இடைக்கால ஏற்பாடாக கொச்சி கடற்படைத் தளத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டதும் ஆகஸ்ட் 29 இல் இருந்து நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

.