This Article is From Jul 09, 2018

மெட்ரோ ரயிலின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கியவர் கைது

சென்னை மெட்ரோ ரயிலின் பெயரில், போலியான இணையதளத்தை உருவாக்கிய கேரள வாலிபர் கைது

மெட்ரோ ரயிலின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கியவர் கைது
Chennai:

சென்னை : சென்னை மெட்ரோ ரயிலின் பெயரில், போலியான இணையதளத்தை உருவாக்கிய கேரள வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீஸார் ஸ்ரீஜித் என்பவரை கேரளாவில் உள்ள மலப்புரத்தில் கைது செய்துள்ளதாக, செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

ஶ்ரீஜித் சென்னை மெட்ரோ ரயில் இணையத்தளத்தின் வடிவமைப்பு, வரைபடம், புகைப்படங்களை திருடி சென்னை மெட்ரோ ரயில் என்ற பெயரில், போலியான இணையதளத்தை உருவாக்கியுள்ளார். அதில் வேலை வாய்ப்பு குறித்த விளம்பரத்தையும் செய்துள்ளார் என்று சைபர் கிரைம் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறுகிறது சைபர் கிரைம் அறிக்கை.

.