Read in English
This Article is From Feb 09, 2020

பெண்கள், சிறாருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 28 விரைவு நீதிமன்றங்களை அமைக்கிறது கேரளா!!

பெண்கள் மற்றும் சிறாருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் முடிவை கேரள அரசு எடுத்திருப்பதாக அம்மாநில அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

பாலியல் குற்றங்களை விசாரிக்க 28 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன.

Thiruvananthapuram:

கேரளாவில் பெண்கள் மற்றும் சிறாருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் புகார்களை விசாரிக்க 28 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதுகுறித்து கேரளாவின் சமூக நீதி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா பேட்டி அளித்துள்ளார். அதில், மோசமான குற்றங்களை செய்வோருக்கு தண்டனை விரைந்து அளிக்கப்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கும் சூழலில் விரைவு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘போக்சோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் குற்றங்களை விசாரிப்பதற்கு 28 விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. இதனை மத்திய அரசு ஏற்று, நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. கேரள உயர் நீதிமன்றம், சட்டத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்' என்றார்.

திருவனந்தபுரத்தில் 4, திரிச்சூரில் 3, மலப்புரத்தில் 3, கொல்லம், கோட்டயம், இடுக்கி, எர்ணாக்குளம், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் தலா 2 விரைவு நீதிமன்றங்கள் அமையவுள்ளன.

Advertisement

கேரளாவில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 12 ஆயிரத்து 234 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றை விரைந்து முடிப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன.

Advertisement