हिंदी में पढ़ें Read in English
This Article is From Sep 27, 2019

ராங் ரூட்டில் வந்த பஸ்: கெத்து காட்டி மிரட்டிய கேரள பெண்

தனியாக பெண் ஒருவர் சாலையில் பேருந்தினை மறித்து நின்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பலரும் அந்த பெண்ணின் தைரியத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Advertisement
விசித்திரம் Edited by

பலரும் பெண்ணை வெகுவாக பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.

கேரளாவில் ஒரு பெண் சாலையின் நடுவில் தனது ஸ்கூட்டியை நிறுத்தி, தவறான பாதையில் பேருந்து செல்வதற்கு வழி கொடுக்க மறுத்துவிட்டாள். வேறு வழியின்றி பேருந்து ஒதுங்கி சரியான பாதையில் சென்றது.

தனியாக பெண் ஒருவர் சாலையில் பேருந்தினை மறித்து நின்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பலரும் அந்த பெண்ணின் தைரியத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். 

இந்த சம்பவம் கேரளாவில் நடந்ததாக கல்ஃப் நியூஸ் தெரிவித்துள்ளது.  கேரளாவில்தான் நடந்ததை பலரும் நம்பர் பிளேட்டினை ஸ்கிரின் சாட் எடுத்து போட்டு உறுதிபடுத்தியுள்ளனர்.

ட்விட்டரில் @TheGhostRider31 என்ற பயனாளர் பகிர்ந்துள்ளார்.

Advertisement

பலரும் பெண்ணை வெகுவாக பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர். 

இந்த வீடியோ  ஆன்லைனில் பகிரப்பட்டத்திலிருந்து 47,000 தடவைகளுக்கு மேல் பகிரப்பட்டது. இது 4,000க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.

Advertisement