This Article is From Oct 23, 2018

‘அர்ஜுன் - ஸ்ருதி ஹரிஹரன் விவகாரத்தை முடித்து வைக்க நடவடிக்கை’: கன்னட திரைப்பட சங்கம்

படப்பிடிப்பின்போது, அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று ஸ்ருதி தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
இந்தியா Posted by

ஸ்ருதி அளித்துள்ள புகாரை அர்ஜுன் மறுத்து வருகிறார்.

நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் புகார் கூறிய விவகாரத்தை சுமுகமாக முடித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கன்னட திரைப்பட சங்கம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கன்னட திரைப்பட சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் பேட்டியளித்த சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. சின்ன கவுடா, “ பாலியல் புகார்கள் தொடர்பாக கன்னட திரைப்பட சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர். அர்ஜுன் மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் இடையே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு ஏற்பட நடவடிக்கை எடுப்போம். எங்கள் பார்வைக்கு எந்த பாலியல் புகார் வந்தாலும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். 

நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் துன்புறுத்தல் புகாரை தெரிவித்திருந்தார். கடந்த 2016-ல் நடந்த படப்பிடிப்பின்போது, அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று ஸ்ருதி தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்த கன்னட திரைப்பட சங்கத்தின் முன்னாள் தலைவர் சா.ரா. கோவிந்து ஸ்ருதி இந்த பிரச்னையை முன்னரே தனது பார்வைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். 

Advertisement

முன்னதாக நடிகர் அர்ஜுனின் மாமனாரும், மூத்த கன்னட நடிகருமான ராஜேஷ், ஸ்ருதிக்கு எதிராக அவமதிப்பு புகாரை அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள அர்ஜுன் தன்மீது ஸ்ருதி கூறும் புகார்களை மறுத்து வருகிறார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement