Read in English
This Article is From Jul 05, 2018

‘தீர்ப்பு தெளிவாக உள்ளது!’- நாராயணசாமிக்கு பதிலடி கொடுத்த கிரண் பேடி

புது டெல்லியில் அரசுக்கே அதிகாரம் இருக்கிறது, ஆளுநருக்கு உச்சபட்ச அதிகாரம் கிடையாது என்று நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வெளியிட்டது.

Advertisement
இந்தியா ,

Highlights

  • டெல்லியில் முதல்வருக்கே அதிகாரம், உச்ச நீதிமன்றம்
  • டெல்லியின் நிலைமை புதுச்சேரிக்கும் பொருந்தும், முதல்வர் நாராயணசாமி
  • புதுச்சேரியும் டெல்லியும் வேறு வேறானவை, உச்ச நீதிமன்றம்
Chennai:

புது டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருக்கிறது, ஆளுநருக்கு உச்சபட்ச அதிகாரம் கிடையாது என்று நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வெளியிட்டது. இந்த நிலைமை மற்றொரு யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் பொருந்துமா என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி.

டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு, அரசு விவகாரங்களில் தன்னிப்பட்ட முடிவெடுக்கம் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. உண்மையான அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே இருப்பதாக நெத்தியடி தீர்ப்பை தந்துள்ளது, 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு.

இந்த தீர்ப்பு, துணை நிலை ஆளுநருடன் முட்டி மோதிக் கொண்டிருந்த ஆம் ஆத்மி அரசுக்கு பெரிய வெற்றியை தந்துள்ளது. மாநில அரசு முடிவெடுக்க முழு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், துணை நிலை ஆளுநர் அதற்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட 5 நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது.

இது ஒரு புறமிருக்க புதுச்சேரிக்கும் டெல்லியின் நிலைமை பொருந்துமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம், ‘டெல்லிக்கு அரசு சட்ட சாசனம் 239 AA பிரிவின் கீழ் அதிகாரம் வழங்கியுள்ளது. ஆனால், புதுச்சேரிக்கோ 239 A பிரிவின் கீழ் மட்டுமே அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதை வைத்துப் பார்த்தால், டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் பெரும்பான்மை அதிகாரம் இருக்கும். ஆனால், புதுச்சேரிக்கோ மக்களால் தேர்நெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோ அல்லது நியிமிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களோ ஆட்சி நடத்த முடியும். அங்கு ஆளுநருக்கு அதிக அதிகாரம் உள்ளது’ என்று கூறியுள்ளது.

புது டெல்லி குறித்த தீர்ப்பு வந்ததையடுத்து, ‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும்’ என இதுப்பற்றி கூறியிருக்கிறார் முதல்வர் நாராயணசாமி. மேலும், தீர்ப்பை ஏற்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் செயல்படா விட்டால், அவர் மீது வழக்கு தொடர போவதாகவும் தெரிவித்திருக்கிறார். அதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

நாராயணசாமியின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் கிரண் பேடி. மேலும், ‘மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றம் புது டெல்லிக்கும் புதுச்சேரிக்கும் உள்ள வித்தியாசம் குறித்து தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது’ என்று ட்வீட் பதிவுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

Advertisement