Kashmir Bus Accident: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கிஷ்தவார் மாவட்டத்தில் மினி பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கேஷ்வானில் இருந்து கிஷ்தவார் நோக்கி காலை 7.30 மணி அளவில் சென்ற அந்த பேருந்தில் 45க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மூத்த அரசியல் தலைவர்கள் மெஹபூபா முப்தி மற்றும் ஓமர் அப்துல்லா உள்ளிட்டோர் உயிரிழந்தோருக்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றிச்செல்வது, அதி வேகத்தில் பேருந்தை இயக்குவது மற்றும் மோசமான சாலைகள் உள்ளிட்ட காரணங்களால் கடந்த காலங்களில் தோடா, கிஷ்த்வார், ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களிலும் மோசமான விபத்துக்களுக்கு வழிவகுத்தன.
முன்னதாக, கடந்த ஜூன் 27 அன்று ஜம்மு பிரிவில் உள்ள ராஜோரி-பூஞ்ச் மாவட்டங்களை இணைக்கும் முகலாய சாலையின் பிர் கி கலி பகுதியில் ஒரு மினி பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து ஒரு தனியார் கணினி பயிற்சி நிறுவனத்தின் 11 மாணவர்கள் இறந்தனர்.
(with inputs from agencies)