This Article is From Oct 27, 2018

இலங்கை நாடாளுமன்றம் சஸ்பெண்ட் - வீட்டை காலி செய்ய மறுக்கும் ரனில் விக்ரமசிங்கே

இலங்கை அதிபர் சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தான் இன்னும் பிரதமர் பொறுப்பில் இருப்பதாக ரனில் விக்ரமசிங்கே கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது

இலங்கை நாடாளுமன்றம் சஸ்பெண்ட் - வீட்டை காலி செய்ய மறுக்கும் ரனில் விக்ரமசிங்கே

பதவியேற்பு விழாவில் ராஜபக்சே - சிறிசேன

Colombo:

இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற நிலையில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன சஸ்பெண்ட் செய்திருக்கிறார். அதே நேரம் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தனது அரசு இல்லத்தை காலி செய்ய மறுத்து வருவதால் சர்ச்சை நீடித்து வருகிறது.

மொத்தம் 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 16-ம்தேதி வரைக்கும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ரனில் விக்ரமசிங்கே கூறியிருந்தார்.

இதற்கிடையே நவம்பர் 5-ம்தேதி இலங்கை பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பான கூட்டம் நடைபெற இருந்தது. இப்போது நாடாளுமன்றம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதால் அந்த அலுவல்கள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணியில் ரணில் விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம்பெற்றிருந்தது. 2015 பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பெற்றது. இந்த கூட்டணியில் சமீப காலமாக பிளவு ஏற்பட்டு வந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவிற்கு எதிரான சிறிசேன ஆதரவாளர்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ரணில் விக்கிரம சிங்கே பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி வாபஸ் பெற்றது.

கடந்த சில நாட்களால் இலங்கை அரசியலில் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனை இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு தூதர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

.