Read in English
This Article is From Aug 31, 2020

உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.1 அபராதத்தை செலுத்த பிரசாந்த் பூஷன் ஒப்புதல்!

முன்னதாக பூஷன், வழக்கிற்கு ஆதாரமாக இருந்த தன்னுடைய டிவிட் குறித்து பரிசீலனை செய்யவும், அப்படியொரு டிவிட் போட்டதற்காக அவர் மன்னிப்புகோரவும் மறுத்துவிட்டார்.

Advertisement
இந்தியா Edited by

மூத்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த்  பூஷன் உச்ச நீதிமன்றத்தையும், அதன் தலைமை நீதிபதியையும் விமர்சித்ததாக நீதிமன்றம் அவரை அமவதிப்பு குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் தண்டனை குறித்த விவரங்கள் இன்று காலை வெளிவந்தன.

குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட பிரசாந்த் பூஷனுக்கு உச்சநீதிமன்றம் ஒரு ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த தொகையை செப்.15ம் தேதிக்கு முன்னதாக செலுத்தவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறை தண்டனையையும், மூன்று ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக பணியாற்ற தடையும் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement

முன்னதாக பூஷன், வழக்கிற்கு ஆதாரமாக இருந்த தன்னுடைய டிவிட் குறித்து பரிசீலனை செய்யவும், அப்படியொரு டிவிட் போட்டதற்காக அவர் மன்னிப்புகோரவும் மறுத்துவிட்டார். நீதிமன்றம், அவர் தன்னுடைய டிவிட் குறித்து பரிசீலனை செய்யவும், மன்னிப்புகோரவும் மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அடிபணியவும், அபராதத்தை மரியாதையுடன் செலுத்தவும் முன்மொழிகிறேன் என்று பூஷன் இன்று தெரிவித்திருக்கிறார். மேலும், நீதிமன்றத்தின் வெற்றி என்பது இந்தியர்கள் அனைவரது வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

இதன் தொடர்ச்சியாக கடைசி விசாரணையில், பூஷனின் வழக்கறிஞர்,“நீதிமன்றம் விமர்சனங்களை முழுமையாக அடைத்துவிட முடியாது.” என வாதிட்டிருந்தார். அதே போல அரசு தரப்பில் ஆஜராகியிருந்த அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலும் தண்டனைக்கு எதிராக வாதிட்டார்.

வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில், “பூஷன் நீங்கள் இந்த அமைப்பின் ஒரு பகுதி. எனவே நீங்கள் இதற்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயல்பட முடியாது. மேலும், இந்த அமைப்பு ஒவ்வொருவரையும் மதிக்கின்றது. நாங்கள் இதேபோல யாருக்கும் கட்டுப்படாமல் இருந்தால் இந்த அமைப்பின் மீது யாருக்கும் நம்பிக்கை இருக்காது.” என நீபதி அருன்மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.

Advertisement