This Article is From Apr 04, 2019

வெட்டி வைத்த மீதமுள்ள காய்கறிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

வெட்டி வைத்த மீதமுள்ள காய்கறிகளை பயன்படுத்தும் பழக்கம் ஆரோக்கியமானது அல்ல. வெட்டி வைத்த காய்கறிகள் விஷமாக மாறிவிடும் அபாயம் இதில் உள்ளது.

வெட்டி வைத்த மீதமுள்ள காய்கறிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

வீட்டில் உள்ள ஃபிரிட்ஜை வாரத்திற்கு இருமுறை அல்லது குறைந்த பட்சம் வாரம் ஒருமுறை சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.

ஹைலைட்ஸ்

  • காய்கறிகளை மென்மையாக கையாள வேண்டும்.
  • காய்கறி நீர் கோர்த்தோ அல்லது அழுகியோ இருந்தால் அதை பயன்படுத்தக்கூடாது
  • காய்கறியை கழுவி பயன்படுத்த வேண்டும்.

உங்களுக்கு வெட்டி வைத்த மீதமுள்ள காய்கறிகளை பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா…? காய்கறிகளை வீணாக்கக் கூடாது என்ற பழக்கத்திலிருந்து வரக்கூடிய ஒன்றாக இருந்தாலும், இந்த மீதமுள்ள காய்கறிகளை பயன்படுத்துவது என்பது ஆரோக்கியமானது அல்ல என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சிம்ரன் கோஸ்லா. குறிப்பாக வெட்டி வைத்த வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்கிறார். வெட்டி வைத்த மீதமுள்ள காய்கறிகளை பயன்படுத்தும் பழக்கம் ஆரோக்கியமானது அல்ல. வெட்டி வைத்த காய்கறிகள் விஷமாக மாறிவிடும் அபாயம் இதில் உள்ளது. 

ஊட்டச்சத்து நிபுணர் சிம்ரன் எழுதியதில், பாக்டீரியா எளிதாக காற்றின் மூலமாக பரவி விடக் கூடியது. கைகளை கழுவாமல் காய்கறிகளை வெட்டினாலோ அல்லது கத்தியை கழுவாமல் வெட்டினாலோ பாக்டீரியா எளிதாக பரவி விடும் என எச்சரிக்கிறார்.

மீதமுள்ள வெட்டிய காய்கறிகளை பாதுகாப்பாக  வைப்பது எப்படி என்பதை பார்க்கலாமா…

qfpdf3d

அன்றைக்குப் பறித்த அல்லது புத்தம் புதிய காய்கறிகளை வாங்க வேண்டியது மிகவும் அவசியம். காய்கறி மற்றும் பழங்கள் அதற்கான நிறத்திலிருந்து மாறியிருந்தால் அவற்றை பயன்படுத்தக் கூடாது. மற்ற காய்கறிகளிருந்து பிரித்து தூரமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

எல்லா காய்கறிகளையும் நன்றாக கழுவிவைக்க வேண்டும். வீட்டில் உள்ள ஃபிரிட்ஜை வாரத்திற்கு இருமுறை அல்லது குறைந்த பட்சம் வாரம் ஒருமுறை சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.

கெட்டுப்போன பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்திருக்கக் கூடாது. குறிப்பாக கெட்டுப்போன வாழைப்பழம், பூண்டு, வெங்காயம், லெமன் ஆகியவற்றை கவனித்து அகற்றி விட வேண்டும்.

இறைச்சி மற்றும் முட்டையுடன் பிற காய்கறிகளை வைக்கக்கூடாது. இறைச்சியை காற்றுப் புகாத டப்பாவில் வைத்து வைக்க வேண்டியது அவசியம். 2 அல்லது 3 நாட்களில் பயன்படுத்தி விடவேண்டும். 

மீதமுள்ள காய்கறிகளில் கெட்டு அழுகிப்போய் நீர் விட்டிருந்தால் அதை பயன்படுத்தாதீர்கள். அதை தூக்கி எறிந்து விடுவது நல்லது.

வெட்டிவைத்த வெங்காயத்தை எப்போதும் பயன்படுத்தாதீர்கள். அதில் பாக்டீரியாவினால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். சாலட்டில் பயன்படுத்துவதற்கு புதியதாக வெட்டி பயன்படுத்துவது அவசியம். 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

.