Read in English
This Article is From Apr 18, 2019

வாக்குப் பதிவு எந்திரம் பழுது: கமல் மற்றும் ஸ்ருதிஹாசன் காத்திருப்பு

Elections 2019: தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான  இடைத் தேர்தலும் இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வத்துடன் காலை முதல் வாக்களித்து வருகின்றனர். 

Advertisement
இந்தியா Written by

Lok Sabha Elections 2019: வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவரும் ஆன கமல்ஹாசன் மற்றும் மகள் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் வாக்களிக்க முடியாமல் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான  இடைத் தேர்தலும் இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வத்துடன் காலை முதல் வாக்களித்து வருகின்றனர். 

நடிகர் அஜீத் விஜய் உட்பட நடிகர் நடிகைகளும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்து வரிசையில் நின்றார் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் அவர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தார். 

Advertisement