மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வாக்குப்பதிவு நேரம் 8 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தல் முடிந்துள்ளது.
இந்தியாவின் 17 வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் இரண்டாம் கட்டத்தின் கீழ் தமிழ்நாடு வருகிறது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குபதிவு நடைப்பெறுகிறது. வேலூரில் நடகக்விருந்த தேர்தல் ரத்தாகியுள்ளது. இதனால் 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி உயிரிழந்தது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் இடத்தை ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திடமும், மறுப்பக்கம் மு.க.ஸ்டாலினிடமும் விட்டுச்சென்றுள்ளனர்.
இரண்டாக உடைந்த அதிமுக அணியில் ஒரு அணியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வமும் மற்றொரு அணியாக சசிகலா, டிடிவி தினகரன் இருக்கின்றனர். இதில் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஆர்.கே.நகரிலே தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தங்களது அணியே உண்மையான அதிமுக என டிடிவி தினகரன் கூறிவருகின்றனர்.
அசாம், பிகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடக, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் கட்டத்தின் கீழ் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 39.49% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரபா சாஹூ தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக நாமக்கல்லில் 41.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 42.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கோளாறு ஏற்பட்டதால் 384 மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள், 692 ஒப்புகை சீட்டு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அடுத்த வாக்குப்பதிவு நிலவரம் மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாலை 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
கரூரில் அதிகபட்சமாக 56.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சென்னையில் குறைந்த பட்சமாக 45.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இடைத்தேர்தலில் 55.97% வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடைசியாக மாலை 7 மணி நிலவரப்படி, 38 மக்களவை தொகுதிகளுக்கு, 69.55 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.