This Article is From Jan 31, 2019

''அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை விரும்புகிறேன்'' - மக்களவை சபாநாயகர்

நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

''அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை விரும்புகிறேன்'' - மக்களவை சபாநாயகர்

பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது.

New Delhi:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை விரும்புவதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார். 

பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இது வரும் 13-ம்தேதி வரை நடைபெறுகிறது. இதனை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆலோசனை நடத்தினார். 

கூட்டத்தின்போது பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்போம் என அனைத்துக் கட்சிகள் உறுதி அளித்துள்ளன. இந்த கூட்டத்திற்கு பின்னர் ராமர் கோயில் விவகாரம் குறித்து சுமித்ராவிடம் கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது-

தற்போது மக்களவை சபாநாயகராக பொறுப்பு வகித்து வருகிறேன். ஒரு பாஜக எம்.பி.யாக பிப்ரவரி 15-ம்தேதிக்கு பின்னர்தான் என்னால் கருத்துக் கூற முடியும். ஆனால் ஒரு ராமர் பக்தையாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை விரும்புகிறேன். 

இவ்வாறு சுமித்ரா கூறினார். 

.