Read in English
This Article is From Mar 15, 2019

மிசோரம் மக்கள் முன்னணியுடன் காங்கிரஸ் கூட்டணி

40 பேர் கொண்ட மிசோரம் சட்டசபையில் காங்கிரசுக்கு 5 உறுப்பினர்களும், மிசோரம் மக்கள் முன்னணிக்கு (ஸெட்.பி.எம்.) 8 உறுப்பினர்களும் உள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

மிசோரத்தில் ஒரேயொரு மக்களவை தொகுதி மட்டுமே உள்ளது.

Aizawl:

மக்களவை தேர்தலை முன்னிட்டு மிசோரமில் ஸெட்.பி.எம். எனப்படும் மிசோரம் மக்கள் முன்னணி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இரு கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மிசோரமை பொறுத்தளவில் ஒரேயொரு மக்களவை தொகுதிதான் இங்கு உள்ளது. இங்கு காங்கிரஸ் போட்டியிடுகிறது.

அய்சால் மேற்கு மேற்கு முதல் தொகுதியில் மிசோரம் மக்கள் முன்னணி போட்டியிடும். 40 பேர் கொண்ட மிசோரம் சட்டசபையில் காங்கிரசுக்கு 5 உறுப்பினர்களும், மிசோரம் மக்கள் முன்னணிக்கு 8 உறுப்பினர்களும் உள்ளனர். 

மற்ற கட்சிகளை பொறுத்தளவில் ஆளும் மிசோரம் தேசிய முன்னணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. 

Advertisement
Advertisement