This Article is From Mar 26, 2019

தமிழகம் மற்றும் புதுவையில் வேட்புமனு தாக்கல் நிறைவு!

தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெற்றது.

Advertisement
இந்தியா Written by

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது.

இதில், திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என ஏராளமானோர் கடைசி நாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிந்த நிலையில், நாளை (27ம் தேதி) வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 29ம் தேதி மாலை 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் வாங்கலாம். அன்று மாலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

Advertisement
Advertisement