This Article is From Apr 18, 2019

தேர்தலில் ஓட்டுப் போடாத சிவகார்த்திகேயன்!! விஷயம் என்னணு தெரியுமா?!

வாக்குச் சாவடிக்கு சென்றுவிட்டு வாக்காளர் அட்டை இல்லாததால் சிவகார்த்திகேயன் திரும்பி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
இந்தியா Written by

நடிகர்கள் இன்று காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் வாக்களிக்க சென்ற அவர் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் திரும்பி வந்திருக்கிறார். 

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். வளசரவாக்கத்தில் இருக்கும் அவர், அங்குள்ள குட்ஷெப்பர்டு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்கு அளிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் அவர் வாக்களிக்க செல்லவில்லை. 

சிவகார்த்திகேயன் பெயர் இல்லாமல் இருந்தாலும், அவரது மனைவி கிருத்திகாவுக்கு ஓட்டு உள்ளது. இதேபோன்று துணை நடிகர் ரோபோ சங்கர் வாக்கு மையம் திறப்பதற்கு முன்பாகவே சாலி கிராமத்தில் உள்ள காவிரி பள்ளியில் காத்திருந்தார். அவரது பெயர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

Advertisement

இதேபோன்று தமிழகத்தின் சில இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளனர். 

Advertisement