பதவிக்காக அதிமுகவினர் எதையும் விற்று விடுவார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. எஸ்.டி.பி.ஐ.க்கு மத்திய சென்னை ஒதுக்கியது போக, மற்ற இடங்களில் அமமுக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதிமுக மற்றும் திமுக கட்சிகளை கடுமையாக பேசி டிடிவி தினகரன் வாக்கு சேகரிக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையில் கரூர் தொகுதி வேட்பாளர் தங்க வேலுவை ஆதரித்து அவர் பேசியபோது, ''பதவிக்காக அதிமுகவினர் எதையும் விற்பனை செய்து விடுவார்கள். மோடி கூறினால், வீடு வாசல் மட்டுமல்ல தங்களது பிள்ளைகளையும் அதிமுகவினர் விற்று விடுவார்கள்'' என்றார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)