This Article is From Apr 18, 2019

வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு! வரிசையில் நின்ற 95 வயது முதியவர் உயிரிழப்பு!!

நாடு முழுவதும் இன்று 2-வது கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு! வரிசையில் நின்ற 95 வயது முதியவர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் இன்று காலை முதலே வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடக்கிறது.

Bhubaneswar:

வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு அடைந்ததால் வாக்குப்பதிவு செய்ய வந்த 95 வயது முதியவர் வரிசையில் நின்று உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒடிசாவில் நடந்திருக்கிறது. 

நாடு முழுவதும் இன்று 2-வது கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து வருகிறது. ஒடிசாவில் அங்குள்ள 5 மக்களவை தொகுதிகள் மற்றும் 35 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. 

அங்குள்ள தல்சரா சட்டமன்ற தொகுதியில் சுந்தர்கர் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் வரிசையில் நின்றவர்கள் தவித்தனர். 

இதேபோன்று சங்கமுந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கன்சமாரி என்ற இடத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதனை சரிசெய்ய தாமதம் ஏற்பட்டதால் வரிசையில் நின்ற 95 வயது முதியவர் நதாபர் பெஹ்ரா என்பவர் மயக்கமுற்று உயிரிழந்தார். 

.