This Article is From Apr 10, 2019

''மோடி மீண்டும் பிரதமராக வர தினமும் பிரார்த்தனை செய்கிறேன்'' - மதுரை ஆதீனம் பேட்டி

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எச். ராஜா மீண்டும் வெற்றி பெற விரும்புவதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா Written by

மதுரை ஆதீனம் அருணகிரி நாதரின் நடவடிக்கைகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கு தினமும் பிரார்த்தனை செய்வதாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எச். ராஜா மீண்டும் வெற்றி பெற விரும்புவதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தனது நடவடிக்கைகளால் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு நித்யானந்தா விவகாரம் எழுந்தபோது மதுரை ஆதீனம் தொடர்ந்து செய்திகளில் வெளிவந்தார். 

சமீபத்தில் கருத்து தெரிவித்த ஆதீனம் தேர்தலுக்கு பின்னர் தினகரன் அதிமுகவுடன் இணைவார் என்று மாறி மாறி கூறி வந்தார். இதனால் கடுப்படைந்த தினகரன் தரப்பினர், ஆதினம் தொடர்ந்து இவ்வாறு பேசிவந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். 

Advertisement

இதேபோன்று நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்று அருணகிரிநாதர் கூறி வந்தார். இந்த நிலையில் பிரதமராக மோடி மீண்டும் வருவதற்கு பிரார்த்தனை செய்து வருவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தமதுரை ஆதினம் கூறியதாவது-

Advertisement

மக்களவை தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் எச். ராஜா வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன். மத்தியில் பாஜக தலைமையில் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். 

தமிழகத்தில் அதிமுக தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறேன். இதற்காக தினமும் பிரார்த்தனை செய்து வருகிறேன்.

Advertisement

இவ்வாறு மதுரை ஆதினம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். 

Advertisement