This Article is From Apr 11, 2019

மக்களின் அன்பால் தன்னிலை மறந்து கண்ணீர் வடித்த அன்புமணி! வைரலாகும் வீடியோ!!

கடகத்தூர் என்ற பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது அன்புமணிக்கு அப்பகுதி மக்கள் பெரும் வரவேற்பை அளித்தனர். இதனால் நெகிழ்ந்துபோன அன்புமணி கண்ணீர் வடித்தார்.

Advertisement
இந்தியா Written by

அன்புமணி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மக்கள் அளித்த வரவேற்பால் தன்னிலை மறந்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்ணீர் வடித்த காட்சி வைரலாகி வருகிறது. மக்களின் அன்பால் நெகிழ்ந்துபோன அன்புமணி, 'வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன்!' என்று வரவேற்பு அளித்தவர்களை பார்த்து கூறுகிறார். இந்த காட்சி காண்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும்படியாக உள்ளது. 

கடகத்தூர் என்ற பகுதியில் நேற்றிரவு அன்புமணி ராமதாஸ் காரில் சென்றிருக்கிறார். அவரைப் பார்த்த அங்கிருந்த சிறுவர்கள் அன்புமணியின் காரின் பின்னாலேயே ஓடி வந்துள்ளனர். இதைக் கண்ட அவர், காரை நிறுத்தி விட்டு சிறுவர்களிடம் சென்று இவ்வாறு ஓடி வரக் கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அன்புமணியை உற்சாகத்துடன் வரவேற்று கோஷங்களை எழுப்பினர். இந்த திடீர் வரவேற்பை எதிர்பாராத அன்புமணி உள்ளத்தால் நெகிழ்ந்துபோனார். பின்னர் மக்கள் முன்னிலையில் பேச வந்த அவருக்கு நா தழுதழுத்தது. என்னை வரவேற்ற உங்களுக்கு வாழ்க்கை முழுவதும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் என்று கூறுவதற்கு முன்பாக அன்புமணியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

Advertisement

நெகிழ்ச்சியால் தொடர்ந்து அழுத அன்புமணி பேச முடியாமல் தவித்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஐயா, ஐயா என கூச்சலிட்டு அப்படி சொல்ல வேண்டாம் என்று குறிப்பிடும் விதமாக கைகளை அசைத்துள்ளனர். இந்த காட்சி இப்போது வைரலாகி வருகிறது. 

Advertisement