This Article is From May 13, 2020

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி; 16ம் தேதி புயலாக மாற வாய்ப்பு: வானிலை மையம்

கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய,கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி; 16ம் தேதி புயலாக மாற வாய்ப்பு: வானிலை மையம்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி; 16ம் தேதி புயலாக மாற வாய்ப்பு: வானிலை மையம்

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், வரும் 16ம் தேதி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வரும் 15 ஆம் தேதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 16 ஆம் தேதி புயலாகவும் மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும்.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், தேனி, நாகை, கடலூர், விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய, லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய, கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 15-ம் தேதி காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், 16-ம் தேதி 55- 65 கி.மீ.வேகத்திலும் , 17-ம் தேதி 65-75 கி.மீ. வேகத்திலும் அவ்வப்போது 85 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதனால் காற்றின் வேகம் அதனைத் தொடர்ந்து வலுப்பெறக்கூடும். மீனவர்கள் இக்காலகட்டங்களில் மத்திய வங்கக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், தேனி, நாகை, கடலூர், விழுப்புரம், அரியலூர் ஆகிய  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய,லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய,கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொறுத்தவரை வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஷியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஷியஸை ஒட்டி இருக்கும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

.