This Article is From Mar 15, 2020

பெரும்பான்மையை நிரூபிக்க தனது எம்.எல்.ஏக்களை போபாலுக்கு கொண்டுவருகிறது காங்கிரஸ்

அனைத்து ராஜினாமாக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டால், காங்கிரஸின் பலம் புதிய பெரும்பான்மை மதிப்பெண் 104 ஐ விடக் கீழே வரும், மேலும் 107 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட பாஜக, அரசாங்கத்தை உருவாக்க முடியும்

மத்தியப் பிரதேசம்: காங்கிரஸ் தனது 80 எம்.எல்.ஏ.க்களை போபாலுக்கு மாற்றியது.

Bhopal:

ஆளுநரின் உத்தரவின்படி திங்கள்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்க முன்னதாக காங்கிரஸ் தனது அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் போபாலுக்கு மாற்றியுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். முதல்வர் கமல்நாத் இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சனிக்கிழமை, ஆளுநர் லால்ஜி டாண்டன் சபாநாயகர் நர்மதா பிரசாத் பிரஜாபதியிடம் திங்களன்று பெரும்பான்மையை நிரூபிக்கச் சொன்னார்.

ஆறு கிளர்ச்சி அமைச்சர்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்த உத்தரவு வந்தது, இது மாநிலச் சட்டசபையில் பெரும்பான்மையை 113 ஆகக் குறைத்திருக்கிறது, தற்போது காங்கிரஸை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை விட இரண்டு குறைவாகும்.

கடந்த வாரம், 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்திருந்தனர், இது 15 மாத கமல்நாத் அரசாங்கத்தைச் சரிவின் விளிம்பிற்குத் தள்ளியது. காங்கிரஸிலிருந்து இருந்து பாஜகவாக மாறிய ஜோதிராதித்ய சிந்தியாவின் விசுவாசிகளான எம்.எல்.ஏக்கள் தற்போது பெங்களூருவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் உள்ளனர்.

தனது அரசாங்கத்தைக் கவிழ்க்க பாஜக முயல்வதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ், கடந்த வாரம் தனது எம்எல்ஏக்களை மற்றொரு காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானுக்கு மாற்றியது.

பெங்களூருவில் உள்ள அதன் எம்.எல்.ஏக்கள் பாஜகவால் வலுக்கட்டாயமாக ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ஹோட்டலில் அவர்களைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸின் இரண்டு அமைச்சர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டு அவர்களுடைய கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் ஒரு தேசிய பிரச்சினை என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ், உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாகக் கூறியது.

"எம்.பி., எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டு, அழுத்தம் கொடுக்கப்பட்டு, அவர்களது உறவினர்கள் தாக்கப்பட்டுள்ளனர் ... பாஜக செய்வது ஒரு கிரிமினல் செயல், நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வோம்".

"மத்தியப் பிரதேசம் போன்ற அமைதியை நேசிக்கும் மாநிலம், ஒருபோதும் குதிரை பேர கலாச்சாரத்திற்கு உள்ளாகாது. எங்கள் எம்.எல்.ஏக்கள் இதில் ஒருபோதும் ஈடுபடவில்லை. ஆனால் இப்போது எங்கள் எம்.எல்.ஏக்கள் பணயக்கைதிகள் போன்ற நிலைமையில் உள்ளனர்" என்று கட்சி தெரிவித்துள்ளது.

சபையில் காங்கிரசுக்கு 108 எம்.எல்.ஏக்கள் உள்ளனர், மேலும் ஏழு நட்பு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது.

அனைத்து ராஜினாமாக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டால், காங்கிரஸின் பலம் புதிய பெரும்பான்மை மதிப்பெண் 104 ஐ விடக் கீழே வரும், மேலும் 107 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட பாஜக, அரசாங்கத்தை உருவாக்க முடியும்.

முதலமைச்சர் கமல்நாத்தின் அரசாங்கம் ஆரம்பத்தில் 120 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டிருந்தது - 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 116 என்ற பெரும்பான்மையைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை நான்கு அதிகமாகும்.

.