This Article is From Oct 16, 2019

மூழ்கும் கப்பலை விட்டு வெளியேறிய கேப்டன் ராகுல் காந்தி -ஓவைசி

கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் தயவில் முஸ்லிம்கள் வாழவில்லை. அதற்கு நாட்டின் அரசியலமைப்பும் அனைத்துக்கும் அப்பாற்பட்ட இறை சக்தியும் தான் காரணம்.

Advertisement
இந்தியா Edited by

மகாராஷ்டிராவில் மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது போன்று முஸ்லிம்களுக்கு ஏற்படுத்த வேண்டும்

Bhiwandi, Maharashtra:

மூழ்கும் கப்பலில் இருந்து சுய பாதுகாப்புக்காக வெளியேறியவர் ராகுல் காந்தி என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிரா பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஓவைசி:

ஒரு கப்பல் நடுக்கடலில் மூழ்கும்போது அதிலிருக்கும் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதுதான் ஒரு கேப்டனின் பொறுப்பு. ஆனால் காங்கிரஸ் எனும் கப்பல் மூழ்குவதைப் பார்த்த பின்பும் அதனை தவிக்கவிட்டு சுயநலத்துடன் தனது பாதுகாப்புக்காக வெளியேறிய கேப்டந்தான் ராகுல் காந்தி என்று விமர்சித்துள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் தயவில் முஸ்லிம்கள் வாழவில்லை. அதற்கு நாட்டின் அரசியலமைப்பும் அனைத்துக்கும் அப்பாற்பட்ட இறை சக்தியும் தான் காரணம். 

Advertisement

முத்தலாக் தடை விதித்தது முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது. பாஜக மேலும் நீண்டகாலம் ஆட்சி செய்யும் என்பதால்  இந்த இருளும் நீடிக்கும். 

பாஜக முஸ்லிம்களுக்கு உண்மையாகவே நன்மை செய்ய விரும்பினால் மகாராஷ்டிராவில் மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது போன்று முஸ்லிம்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement