இன்று பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீர் மீதான அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்த எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு சவால் விடுத்தார். "அவர்கள் தைரியம் இருந்தால்" அதை மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
"அதை மீண்டும் கொண்டுவர யாருக்கும் தைரியம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? அவர்கள் துணிந்தால் அவர்களின் அரசியல் வாழ்க்கை பிழைக்குமா?" என்று மாநிலத்தில் பிரச்சாரம் செய்யும் ராகுல் காந்திக்கு நேரடி சவாலை விடுத்தார்.
அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை அகற்றியது.இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கும் பாஜக நடவடிக்கை எடுத்தது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது - - ஜம்மு-காஷ்மீர் இந்தியாவை "ஒரே மாநிலமாக" ஏற்றுக்கொண்டது என்றும் அதன் நிலையை மாற்றவோ அல்லது பிரிக்கவோ அல்லது அதன் எந்த பகுதியையும் குறைக்கவோ எந்த அரசாங்கத்திற்கும் அதிகாரம் இல்லை என்று தெரிவிதது.
"உங்களுக்கு தைரியம் இருந்தால், தெளிவான நிலைப்பாட்டை எடுத்து முன் வாருங்கள்" என்று மகாராஷ்டிராவின் ஜல்கானில் ஒரு பேரணியில் உரையாற்றிய பிரதமர் இன்று கூறினார்.
"நான் எதிர்க்கட்சியை சவால் விடுகிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், ஜம்மு &காஷ்மீரின் மீதான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்குவோம் என்று அறிக்கையில் கூற தைரியம் உண்டா என்று சவால் விடுத்தார்.
கடந்த மாதம், அரசாங்கம் தனது முடிவையும் அதற்கான காரணங்களையும் எவ்வாறு நிறைவேற்றியது என்பதை விளக்கும் பொதுக் கூட்டத்தில்,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (போக்) உருவாகியதற்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை அமித் ஷா குற்றம் சாட்டியிருந்தார், அதற்கு காரணம் “ அகால யுத்த நிறுத்தம என்று தெரிவித்தார்.
"370 வது பிரிவை ரத்து செய்வதன் மூலம் நரேந்திர மோடி இந்த நாட்டை தேசியவாதத்தை கொண்டாட ஒரு காரணத்தை அளித்துள்ளார்" என்று மகாராஷ்டிராவின் பீட் நகரில் நடந்த பேரணியில் அவர் கூறினார்.