மகாராஷ்டிராவின் முதல்வரான தேவேந்திரா ஃபட்னாவீஸின் மனைவி அம்ருத்தா. இந்தியாவின் முதல் பயணிகள் கப்பலை திறந்து வைக்க அவரும், ஃபட்னாவீஸும் சென்றிருந்தனர். அப்போது, கப்பலின் விளிம்புப் பகுதிக்கு சென்று அம்ருதா, அபாயகரமான செல்ஃபி எடுத்துள்ளார். அம்ருதாவின் இந்த செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் முதல் பயணிகள் கப்பலான (அங்கிரியா) திறந்து வைக்க மகாராஷ்டிராவின் முதல்வரான தேவேந்திரா ஃபட்னாவீஸ் மற்றும் அவர் மனைவி அம்ருத்தாவும் சென்றிருந்தனர். அப்போது அங்கே போடபட்டிருந்த தடைகளை மீறிய அம்ருதா, போலீஸ் அறிவுரையையும் கேட்காமல் கப்பலிலின் விளிம்புப் பகுதிக்கு சென்று செல்ஃபி எடுத்தார். இந்த செயலை பலர் கண்டித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் போது மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியும் உடனிருந்தார்.
2017-இல் வெளிவந்த காரநிஜி மீலான் பல்கலைக்கழகம் மற்றும் இந்திரபிரஸ்தா செய்தி நிறுவனங்களின் ஆராய்ச்சி அறிக்கையின் முடிவுபடி, இந்தியாவில்தான் செல்ஃபி எடுக்கும் போது அதிக பேர் இறக்கின்றனர் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.