Read in English
This Article is From Dec 20, 2018

மஹாராஷ்டிராவில் ஆணவக் கொலை!

Honour Killing: 25 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் பலமாக தாக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு வரும் முன்னரே உயிரிழந்தார்.

Advertisement
இந்தியா
Beed, Maharashtra:

கடந்த புதன்கிழமையன்று, மஹாராஷ்டிராவில் உள்ள பீட் நகரத்தில், 25 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் பலமாக தாக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு வரும் முன்னரே உயிரிழந்தார்.

அதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில், கொலைசெய்யப்பட்ட அந்த இளைஞன், பீட்டிலுள்ள  ஆதித்யா பொறியியல் கல்லுரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் சுமித் சிவாஜிராவ் வாக்மாரே என அடையாளம் காணப்படார்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டின் எதிர்பை மீறி இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த புதன்கிழமையன்று சுமித் மற்றும் அவரது மனைவியை கல்லுரிக்கு வந்தபோது இரண்டு நபர்கள் வழிமறைத்து சுமித்தை கத்தியால் குத்தியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து.

இச்சம்பவம் ஆணவக்கொலையாக கூட இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Advertisement