Pune:
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஜவுளி குடோனில் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது காலை 9 மணிக்கு உருளி டெவாச்சி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தீ விபத்து ஏற்பட்டபோதும், மூச்சுத் திணறல் காரணமாகத்தான் உயிரிழப்புகள் நேர்ந்திருக்கின்றன.
தீ விபத்து தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான சரியான காரணம் குறித்த விவரம் இன்னும் தெரியவில்லை.
COMMENTS
Advertisement