Read in English
This Article is From Feb 10, 2019

ரஜினி, விஜயகாந்த் பட வில்லன் மர்ம மரணம்

இவர் தமிழில் ரஜினிகாந்துடன் ‘வீரா’ விஜயகாந்துடன் ‘பெரிய மருது’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

Advertisement
Entertainment

மகேஷ் ஆனந்த் எப்படி இறந்தார் என்பது உடற்கூறாய்வுக்குப் பின்பே தெரியவரும்.

Highlights

  • திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் மகேஷ் ஆனந்த்
  • ‘வீரா’ ‘பெரிய மருது’ ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
  • மும்பையில் தனியாகவே வசித்து வருகிறார்
Mumbai:

தமிழ் இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் மகேஷ் ஆனந்த் (57). நேற்று சனிக்கிழமை மும்பையில் இவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது தற்கொலை அல்ல என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. தற்கொலைக்கான குறிப்புகள் எதுவும் இதுவரை கைப்பற்றப்படவில்லை. 

இவர் கடைசியாக  கோவிந்தாவுடன் ‘ரங்கீலா ராஜா' என்ற படத்தில் நடித்திருந்தார். 

Advertisement

இவரது உடல் அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்டது. தற்போது உடற்கூறாய்வுக்காக இவரது உடல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

நடிகர் மகேஷ் ஆனந்துக்கு மதுப்பழக்கம் உள்ளது. இவரது மனைவி மாஸ்கோவில் இருந்து வருகிறார். மும்பையில் தனியாகவே வசித்து வருகிறார்.

Advertisement

இவரின் இறப்பு காரணம் என்னவென கண்டறிய முடியவில்லை. உடலும் அழுகிய நிலையில் கிடைத்துள்ளதால் இறந்து எத்தனை நாள் ஆனது என்பதும் உடற்கூறாய்வுக்கு பின்பே தெரியவரும்.

இவர் தமிழில் ரஜினிகாந்துடன் ‘வீரா' விஜயகாந்துடன் ‘பெரிய மருது' திரைப்படத்திலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 200 படங்களில் நடித்துள்ளார்.

Advertisement