This Article is From Nov 09, 2018

அதிமுக எதிர்க்கும் காட்சிகளை நீக்குகிறது சர்கார் படக்குழு - மறுதணிக்கைக்கு ஒப்புதல்!

சர்கார் பட விவகாரத்தில் அதிமுக எதிர்க்கும் காட்சிகளை நீக்குவதற்காக மறுதணிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அதிமுக எதிர்க்கும் காட்சிகளை நீக்குகிறது சர்கார் படக்குழு - மறுதணிக்கைக்கு ஒப்புதல்!

சர்கார் பட விவகாரம் இன்றைக்குள் முடிவுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Chennai:

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதா அதிமுக தரப்பில் கூறப்பட்டு, அதனை நீக்க வலியுறுத்தி போராட்டங்கள் தீவிரம் அடைந்திருக்கின்றன. இந்நிலையில், சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க ஒப்புதல் வழங்குப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் சர்கார் படத்திற்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் அதிமுகவினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். படத்தில் அரசு அளித்த இலவச பொருட்களை மக்கள் தூக்கி எறிவதாக வரும் காட்சி பெரும் பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதனால் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என சம்பந்தப்பட்டவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே எதிர்ப்புகள் வலுத்ததுடன், திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த சர்கார் பட வாழ்த்து பேனர்கள் அதிமுகவினரால் கிழக்கப்பட்டன.

நிலைமை அசாதாரணம் அடைந்ததை தொடர்ந்து நேற்றிரவு இயக்குனர் முருகதாஸ் வீட்டிற்கு போலீசார் சென்றனர். அவர் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியான நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக முருகதாஸின் வீட்டிற்கு சென்றோம் என காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிமுக எதிர்க்கும் காட்சிகளை நீக்க சர்கார் பட தயாரிப்பு தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காட்சிகளை நீக்குவதற்காக மறு தணிக்கை செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்கார் பட விவகாரம் இன்றைக்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.