This Article is From May 15, 2019

''மக்கள் நீதி மய்யம் பெயரே சரியில்லை'' : அமைச்சர் செல்லூர் ராஜு

கமலின் தேர்தல் பிரசாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அவர் கட்சியை கலைத்து விட்டு நடிப்பில் கவனம் செலுத்தலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Written by

கமல் விவகாரம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு பதில் அளித்துள்ளார்.

'மக்கள் நீதி மய்யம் பெயரே சரியில்லை. அதனை மக்கள் ஏற்கவில்லை' என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சர்ச்சையை கிளப்பினார். 

இந்த விவகாரம் மோடி வரை சென்று அதற்கு அவர் பதில் அளித்து, இன்று கமல் தன் மீதான சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

கமல் 2 படங்களில் நடிக்கிறார். அவர் கட்சியை கலைத்து விட்டு நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தனிப்பட்ட முறையில் கூறிக் கொள்கிறேன். மக்கள் நீதி மய்யம் என்ற பெயரே சரியில்லை.

Advertisement

இப்படியொரு கட்சியை ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக இல்லை. கமல் நல்ல நடிகர். தமிழ்க்காரர். டார்ச் லைட்டை வைத்துக் கொண்டிருப்பதால் அவருக்கு கைதான் வலிக்கிறதே தவிர டார்ச் லைட் எரியவில்லை. எரியப்போவதும் இல்லை. 

இவ்வாறு செல்லூர் ராஜு கூறினார். 

Advertisement
Advertisement